tamilnadu

img

உ.பி.,யில் வேகமாகப் பரவும் கொரோனா...  ஒரே நாளில் 172 பேருக்கு பாதிப்பு

லக்னோ
நாட்டின் வடபகுதி மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 42 பேர்  தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில்,  உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.

போலீசார் மீது தாக்குதல் 
கடந்த 1-ஆம் தேதி முசாபர் நகரில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் கண்டித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் வாசிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், ஒரு காவல் ஆய்வாளர், காவலர் படுகாயம் அடைந்தார். இனி காவல்துறையினரை  தாக்கினால் தேசத்துரோக சட்டம் பாயும் என்று மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  
 

;